/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவணங்கள் இல்லாத ரூ.1.81 கோடி பறிமுதல்
/
ஆவணங்கள் இல்லாத ரூ.1.81 கோடி பறிமுதல்
ADDED : ஏப் 06, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அபிராமபுரம், காரில் ஆவணங்களின்றி கொண்டு வந்த 1.81 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
தென்சென்னை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ராஜா அண்ணாமலைபுரம், 3வது குறுக்கு தெருவில், தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அதில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 1.81 கோடி ரூபாய் சிக்கியது.
காரில் வந்த கிருஷ்ணமூர்த்தி, சிவகுமார், கலாம் ஆகியோரிடம் அந்த பணம் குறித்து கேட்டதற்கு, சரியான பதில் இல்லை. பின், அந்த பணம் வருமான வரித்துறையில் ஒப்படைக்கப்பட்டது.

