sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.50 லட்சம் நிலமோசடி 2 பேர் கைது

/

ரூ.50 லட்சம் நிலமோசடி 2 பேர் கைது

ரூ.50 லட்சம் நிலமோசடி 2 பேர் கைது

ரூ.50 லட்சம் நிலமோசடி 2 பேர் கைது


ADDED : ஜூலை 31, 2024 12:13 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, கோடம்பாக்கம், ரங்கராஜபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் தெய்வ ஜோதி, 67. இவர், கடந்த மே 4ம் தேதி ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்று அளித்திருந்தார்.

அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்ததாவது:

அம்பத்துார் அடுத்த புத்தகரம் கிராமத்தில், எனக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2,580 சதுர அடி நிலம் இருந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன், அந்த இடத்தை வில்லங்கம் போட்டு பார்த்தபோது, என் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து, போலியான கையெழுத்து போட்டு, ஏழுமலை என்பவருக்கு விற்பனை செய்தது தெரிந்தது.

எனவே, என் நிலத்தை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், தலைமறைவாக இருந்த மாதவரம், பொன்னியம்மன் மேடைச் சேர்ந்த ஆல்டிரின், 35, மற்றும் கோபி, 38,ஆகியோரை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us