sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.2 கோடி மதிப்பில் வடிகால் கே.கே.நகரில் பணிகள் தீவிரம்

/

ரூ.2 கோடி மதிப்பில் வடிகால் கே.கே.நகரில் பணிகள் தீவிரம்

ரூ.2 கோடி மதிப்பில் வடிகால் கே.கே.நகரில் பணிகள் தீவிரம்

ரூ.2 கோடி மதிப்பில் வடிகால் கே.கே.நகரில் பணிகள் தீவிரம்


ADDED : மே 21, 2024 12:20 AM

Google News

ADDED : மே 21, 2024 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.கே.நகர், கே.கே.நகர், ராணி அண்ணா நகர் குடியிருப்பில், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் பிரச்னைக்கு தீர்வு காண, 2 கோடி ரூபாய் மதிப்பில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை, கோடம்பாக்கம் மண்டலம், 136வது வார்டு கே.கே.நகரில், ராணி அண்ணா நகர் குடியிருப்பு அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இந்த குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்குவது வாடிக்கை.

இதற்கு தீர்வு காணும் விதமாக, கே.கே.நகரில் 450 மீட்டர் துாரத்திற்கு, 2 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்க, மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டது.

இதையடுத்து, ராணி அண்ணா நகர் குடியிருப்பை ஒட்டியுள்ள, பி.டி., ராஜன் சாலையின் ஒரு பகுதியில் உள்ள பழைய மழைநீர் வடிகால் இடிக்கப்பட்டு, புது மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.

இப்பணிகள் முடிந்த நிலையில், இச்சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைத்து, அதை கே.கே.நகர் காமராஜர் சாலையில் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஒரு வழிப்பாதையாக உள்ள பி.டி., ராஜன் சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது.

இப்பணிகள் நிறைவு பெற்ற பின், ராணி அண்ணா நகர் குடியிருப்பில் இருந்து வெளியேறும் மழைநீர், பி.டி., ராஜன் சாலை, காமராஜர் சாலை வழியாக அசோக் பில்லர் சாலை சென்று, அங்கிருந்து நெடுஞ்சாலை துறை மழைநீர் வடிகால் வழியாக அடையாற்றில் வெளியேறும்.

இதற்காக கே.கே.நகர் காமராஜர் சாலையில் உள்ள பழைய மழைநீர் வடிகாலை இடித்து, புது மழைநீர் வடிகால் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us