sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

2 சாராய ஆலைகளுக்கு அதிபதி தொகுதிக்கு எப்படி வருவார்?

/

2 சாராய ஆலைகளுக்கு அதிபதி தொகுதிக்கு எப்படி வருவார்?

2 சாராய ஆலைகளுக்கு அதிபதி தொகுதிக்கு எப்படி வருவார்?

2 சாராய ஆலைகளுக்கு அதிபதி தொகுதிக்கு எப்படி வருவார்?


ADDED : மார் 24, 2024 12:55 AM

Google News

ADDED : மார் 24, 2024 12:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராணிப்பேட்டை, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில், அரக்கோணம் லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் விஜயன் அறிமுக கூட்டம், நேற்று நடந்தது. அரக்கோணம் எம்.எல்.ஏ., ரவி பேசியதாவது:

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அரிய மலர் உள்ளது. அது போல், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் ஜெகத்ரட்சகன் தொகுதிக்கு வந்து செல்வார். கடந்த 2019ம் ஆண்டு தேர்தலின்போது வந்த ஜெகத்ரட்சகன், தற்போது 2024ல் வந்துள்ளார். அடுத்ததாக, 2029 தேர்தலின் போது தான் தொகுதிக்கு வருவார்.

இரண்டு சாராய ஆலைகளுக்கு அதிபதி, 26 கல்வி நிறுவனங்களுக்கு உரிமையாளராக இருக்கும் ஜெகத்ரட்சகன், தொகுதி மக்களுக்கு எப்படி தொண்டு செய்ய முடியும் என்பதை வாக்காளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

கடந்த சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை தான், ஸ்டாலின் தற்போது மீண்டும் அளித்துள்ளார். அதாவது புதிய மொந்தையில் பழைய கள் என்பது போல் சொல்லியுள்ளார். ஜெயலலிதா, எதிரிகளை மட்டுமே எதிர்கொண்டார். ஆனால் பழனிசாமி, எதிரிகள், துரோகிகள் என பலரையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

அ.தி.மு.க., தொண்டர்கள் முழுவீச்சில் தேர்தல் பணியாற்றி, நம் வேட்பாளர் விஜயனை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us