sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

2,000 கிலோ குட்கா பறிமுதல் நான்கு பேர் சிக்கினர் நான்கு பேர் கைது

/

2,000 கிலோ குட்கா பறிமுதல் நான்கு பேர் சிக்கினர் நான்கு பேர் கைது

2,000 கிலோ குட்கா பறிமுதல் நான்கு பேர் சிக்கினர் நான்கு பேர் கைது

2,000 கிலோ குட்கா பறிமுதல் நான்கு பேர் சிக்கினர் நான்கு பேர் கைது


ADDED : மே 26, 2024 12:21 AM

Google News

ADDED : மே 26, 2024 12:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.பி.,சத்திரம்,

குன்றத்துார் பகுதியில் பதுக்கி வைத்து, சென்னை முழுதும் குட்கா போதை பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதாக, கிழக்கு மண்டல இணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கீழ்ப்பாக்கம் கார்டன் சாலையில் சென்ற, 'டாடா ஏசி' வாகனத்தை மடக்கி, டி.பி.,சத்திரம் போலீசார் சோதித்த போது, அதில், பண்டல் பண்டலாக குட்கா பாக்கெட்கள் இருந்தது தெரிந்தது.

விசாரணையில், பெங்களூரில் இருந்து குட்காவை கடத்தி வந்து, குன்றத்துாரில் பதுக்கி, அங்கிருந்து சென்னை முழுதும் கடைகளுக்கு வினியோகம் செய்தது தெரியவந்தது.

அவர்கள் கொடுத்த தகவலின்படி, குன்றத்துாரில் தனியார் தண்ணீர் கேன் கிடங்கில் இருந்து, 2,000 கிலோ குட்கா உள்ளிட்ட போதை பொருட்களில் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில், மாங்காடு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ், 33, துாத்துக்குடியைச் சேர்ந்த அர்திஸ் வில்சன், 27, முத்துகுமார், 24, சிவா, 22, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.

இதில், பால்ராஜ் மற்றும் அர்திஸ் வில்சன் மீது வாலாஜாபேட்டையில் குட்கா வழக்கு உள்ளது.






      Dinamalar
      Follow us