sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மத்திய அரசு ஊழியரிடம் ரூ.2.23 லட்சம் நுாதன மோசடி

/

மத்திய அரசு ஊழியரிடம் ரூ.2.23 லட்சம் நுாதன மோசடி

மத்திய அரசு ஊழியரிடம் ரூ.2.23 லட்சம் நுாதன மோசடி

மத்திய அரசு ஊழியரிடம் ரூ.2.23 லட்சம் நுாதன மோசடி


ADDED : ஆக 09, 2024 12:27 AM

Google News

ADDED : ஆக 09, 2024 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுங்கையூர்,

மத்திய அரசு ஊழியரிடம், போலி நகைகளை கொடுத்து, 2.23 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

அப்துல்லா ஜெய்ராம் என்பவர், 36 கிராம் தங்க நகைகளை கொடுங்கையூர், டி.எச்., சாலையிலுள்ள, ஜெய்ராம் சீர்வி அடகு கடையில் அடமானம் வைத்ததாகவும், அதை மீட்க முடியாததால், யாரேனும் பணம் கொடுத்து மீட்டுக் கொள்ளலாம் எனவும், ஆன்லைனில் பதிவிட்டிருந்தார்.

இதை பார்த்த, பெரம்பூர் படேல் நகரைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியரான சுந்தர கிருஷ்ண யாதவ், 31, என்பவர், தான் அடகு நகைகளை மீட்டுக் கொள்வதாக, அவரிடம் கூறியுள்ளார்.

இதற்காக அப்துல்லா ஜெய்ராமிடம், 2.23 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அவரும், 36 கிராம் எடையிலான நகைகளை மீட்டு, சுந்தர கிருஷ்ண யாதவிடம் வழங்கியுள்ளார்.

பின், இந்த நகைகளை உருக்க, சவுகார்பேட்டை கொண்டு சென்ற போது, பரிசோதனையில் அவை போலியானவை என தெரிந்தது.

அப்துல்லா ஜெய்ராமை தொடர்பு கொண்ட போது, அவரின் மொபைல் எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

அதிர்ச்சியடைந்த சுந்தர கிருஷ்ண யாதவ், கொடுங்கையூர் போலீசில் நேற்று புகார் அளித்தார்.

மோசடியில் ஈடுபட்டவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us