/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
25 சவரன் 'ஆட்டை' போட்ட 'பீரோ புல்லிங்' திருடர்கள்
/
25 சவரன் 'ஆட்டை' போட்ட 'பீரோ புல்லிங்' திருடர்கள்
ADDED : ஆக 19, 2024 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தரமணி:தரமணி, கானகம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 55; தனியார் நிறுவன ஊழியர். கடந்த 15ம் தேதி குடும்பத்துடன் வெளி ஊருக்கு சென்று, நேற்று காலை வீடு திரும்பினார்.
வீட்டின் கதவு திறந்து இருத்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, இரண்டு பீரோக்களை உடைத்து, 25 சவரன் நகைகள் கொள்ளையடித்தது தெரிந்தது.
தரமணி போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். பின், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து வீட்டில் கைரேகை பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

