ADDED : ஆக 05, 2024 12:58 AM
சென்னை, சுதந்திர தினவிழாவையொட்டி, இன்று மற்றும் 9, 13ம் தேதிகளில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுவதால், காமராஜர் மற்றும் ராஜாஜி சாலையில், காலை 6:00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை மாநகர போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
காமராஜர் சாலை, ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலைகளில் வாகன அனுமதி அட்டை பெற்றிருப்போர், தவிர மற்ற வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது
காமராஜார் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கி செல்லும் எல்லா வாகனங்களும் உழைப்பாளர் சிலையிலிருந்து வாலாஜா சாலை, அண்ணாசாலை, அண்ணாமலை மன்றம் சிக்னல் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக செல்லலாம்
பாரிமுனையில் இருந்து ராஜாஜி சாலை, தலைமைச் செயலகம் வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும், வடக்கு கோட்டை பக்க சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சிக்னல், முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை வாலாஜா சாலை வழியாக செல்லலாம்
முத்துசாமி பாலத்தில் ஈருந்து கொடிமரச்சாலை வழியாக காமராஜார் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.
வாகன நிறுத்தங்கள்
சிவப்பு மற்றும் பர்பிள் வண்ண வாகன அனுமதி அட்டை வைத்திருப்போர், காலை 8:30 மணி வரை ராஜாஜி சாலை வழியாக சென்று தலைமைச் செயலக உள்வாயிலின் அருகே இறங்கி, வாகனத்தை கோட்டை வளாகத்தில்
ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்த வேண்டும்
நீலம் மற்றும் பிங்க் வண்ண அனுமதி அட்டை வைத்திருப்போர், காலை 8:30 மணிவரை ராஜாஜி சாலை, போர் நினைவுச் சின்னம், கொடிமரச்சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி ரோடு, வடக்கு கோட்டை பக்க சாலை, பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக சென்று, தலைமை செயலக வெளி வாயிலின் அருகே இறங்கி கொண்டு, வாகனங்களை தலைமைச் செயலகத்திற்கு எதிரில் உள்ள பொதுப்பணித்துறை வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.
அனுமதி அட்டை இல்லாத வாகனங்களில் வருவோர், போர் நினைவுச் சின்னம் அருகில் இறங்கிக்கொண்டு, வாகனங்களை தீவுத்திடலில் உள்ளே நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.