/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை பொருள் வழக்கு மேலும் 3 பேர் கைது
/
போதை பொருள் வழக்கு மேலும் 3 பேர் கைது
ADDED : பிப் 27, 2025 01:10 AM

சென்னை,சூளைமேடு காவல் ஆய்வாளர் தலைமையிலான போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஜன, 25ம் தேதி கோக்கைன் போதைப் பொருள் வைத்திருந்த, பயாஸ் அகமது, 31, சந்திரசேகர், 35 ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், சாலிகிராமத்தைச் சேர்ந்த வாசில் அகமது, 26 உட்பட, 14 பேரை போலீசார் கைது செய்தனர். 60 கிராம் கோக்கைன், 14 மொபைல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள், 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் வழக்கில் தொடர்புடைய நைஜீரியன் நாட்டைச் சேர்ந்த நாதனியல் சுப்பிசர், 34, ஆயிரம்விளக்கைச் சேர்ந்த ராம்குமார், 37, ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த புருஷோத்தமன், 32, ஆகிய மூவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 5 கிராம் கோக்கைன், 3 ஐ-போன்கள், 4 மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.