/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் ஒயரில் சிக்கி 4 பசு மாடுகள் பலி
/
மின் ஒயரில் சிக்கி 4 பசு மாடுகள் பலி
ADDED : மே 17, 2024 12:17 AM
உத்திரமேரூர்,
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், வயலக்காவூர் கிராமத்தைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் மனைவி மோகனா, 56; விவசாயி. நேற்று காலை 8:30 மணிக்கு, தனக்கு சொந்தமான கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார்.
அப்பகுதி வயல்வெளியில் சேதமான ஒரு மின்கம்பம், பாதியாக உடைந்து மின் ஒயருடன் கீழே விழுந்திருந்தது. இதை கவனிக்காத மோகனா, அந்த வழியாக கால்நடைகளை ஓட்டி வந்தார்.
அப்போது, நிலத்தில் விழுந்து கிடந்த மின் ஒயரில் சிக்கி, சம்பவ இடத்திலேயே நான்கு கறவை பசுக்களும் உயிரிழந்தன.
பழுதடைந்த மின்கம்பம் மற்றும் அதை கவனிக்காத மின்வாரியத்தின் அலட்சியமே, கால்நடைகள் இறப்பிற்குக் காரணம் என அப்பகுதியினர் குற்றம்சாட்டினர். இதுகுறித்து, மாகரல் போலீசார் விசாரிக்கின்றனர்.

