sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின் ஒயரில் சிக்கி 4 பசு மாடுகள் பலி

/

மின் ஒயரில் சிக்கி 4 பசு மாடுகள் பலி

மின் ஒயரில் சிக்கி 4 பசு மாடுகள் பலி

மின் ஒயரில் சிக்கி 4 பசு மாடுகள் பலி


ADDED : மே 17, 2024 12:17 AM

Google News

ADDED : மே 17, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்,

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், வயலக்காவூர் கிராமத்தைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் மனைவி மோகனா, 56; விவசாயி. நேற்று காலை 8:30 மணிக்கு, தனக்கு சொந்தமான கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார்.

அப்பகுதி வயல்வெளியில் சேதமான ஒரு மின்கம்பம், பாதியாக உடைந்து மின் ஒயருடன் கீழே விழுந்திருந்தது. இதை கவனிக்காத மோகனா, அந்த வழியாக கால்நடைகளை ஓட்டி வந்தார்.

அப்போது, நிலத்தில் விழுந்து கிடந்த மின் ஒயரில் சிக்கி, சம்பவ இடத்திலேயே நான்கு கறவை பசுக்களும் உயிரிழந்தன.

பழுதடைந்த மின்கம்பம் மற்றும் அதை கவனிக்காத மின்வாரியத்தின் அலட்சியமே, கால்நடைகள் இறப்பிற்குக் காரணம் என அப்பகுதியினர் குற்றம்சாட்டினர். இதுகுறித்து, மாகரல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us