ADDED : ஜூன் 23, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சைதாப்பேட்டை:நந்தனம், லோட்டஸ் காலனியைச் சேர்ந்தவர் கணேசன், 54. ராணுவத்தில், லெப்டினன்ட் ஜெனரலாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவரது, வீட்டை ஒட்டி சரவணன், 42, என்பவர் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இரு நாட்களுக்கு முன், நான்கு பேர், சரவணனிடம் தகராறு செய்தனர். இதை, கணேசன் தட்டி கேட்டார். இதில், நான்கு பேரும் சேர்ந்து, கணேசனை சரமாரியாக தாக்கினர்.
சைதாப்பேட்டை போலீசார் விசாரித்ததில் ஆலந்துாரைச் சேர்ந்த யோகி, 34, ஜோஸ்வா, 27, அரவிந்த், 34, பிரவீன், 30, என தெரிந்தது. அவர்கள் 4 பேரையும் நேற்று, கைது செய்தனர்.