sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பொன்னேரியில் 40 சவரன் திருட்டு மிளகாய் பொடி துாவி 'எஸ்கேப்'

/

பொன்னேரியில் 40 சவரன் திருட்டு மிளகாய் பொடி துாவி 'எஸ்கேப்'

பொன்னேரியில் 40 சவரன் திருட்டு மிளகாய் பொடி துாவி 'எஸ்கேப்'

பொன்னேரியில் 40 சவரன் திருட்டு மிளகாய் பொடி துாவி 'எஸ்கேப்'


ADDED : ஜூலை 06, 2024 12:35 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டைச் சேர்ந்தவர் ஹரிமுத்து, 65; மாதவரம் அருகே, வெல்டிங் பட்டறைநடத்தி வருகிறார்.

இவரது மனைவி பாண்டியம்மாள், 60, மீஞ்சூரில் பழைய துணிகளை சேகரித்து, அதை மறுசுழற்சி செய்யும் கடைக்கு அனுப்பும் தொழில் செய்கிறார்.

தம்பதி, நேற்று முன்தினம் காலை, வழக்கம்போல் பணிக்கு சென்று, இரவு வீடு திரும்பினர். வெளியே இரு இரும்பு கதவுகளும் பூட்டப்பட்டிருந்த நிலையில், வாசல் மரக்கதவு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே, பீரோவில் இருந்த 40 சவரன் நகை மற்றும் 4.50 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து ஹரிமுத்து, மீஞ்சூர் போலீசில் புகார் அளித்தார்.

கொள்ளையர்கள், தடயங்களை மறைக்க வீடு முழுதும் மிளகாய் பொடியை துாவி சென்றுள்ளனர். போலீசார், மோப்ப நாய், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.

போலீசார் முதற்கட்ட விசாரணையில் வீட்டின் பின்புற சுவர் வழியாக மாடியில் ஏறி, படிக்கட்டுகளில் கீழிறங்கி, கதவை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. கொள்ளையில் ஈடுபட்டோரை போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us