/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவர்களுக்கு பிஸ்கட் தந்த பா.ஜ.,வினர் 5 பேர் கைது
/
மாணவர்களுக்கு பிஸ்கட் தந்த பா.ஜ.,வினர் 5 பேர் கைது
மாணவர்களுக்கு பிஸ்கட் தந்த பா.ஜ.,வினர் 5 பேர் கைது
மாணவர்களுக்கு பிஸ்கட் தந்த பா.ஜ.,வினர் 5 பேர் கைது
ADDED : மார் 07, 2025 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக, 6ம் தேதி பா.ஜ., சார்பில் பல்வேறு இடங்களில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
காரப்பாக்கத்தில் நடந்த கையெழுத்து இயக்கத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு பிஸ்கட் கொடுத்து, கையெழுத்து வாங்கியதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக, கண்ணகி நகர் போலீசார் வழக்கு பதிந்து, தமிழக பா.ஜ., மாநில செயலர் சூர்யா, காரப்பாக்கம் கவுன்சிலர் சுந்தரம், நிர்வாகிகள் மோகன்குமார், அன்பரசன், கோட்டீஸ்வரன் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.