sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போதை மாத்திரை வைத்திருந்த 5 பேர் கைது

/

போதை மாத்திரை வைத்திருந்த 5 பேர் கைது

போதை மாத்திரை வைத்திருந்த 5 பேர் கைது

போதை மாத்திரை வைத்திருந்த 5 பேர் கைது


ADDED : மார் 13, 2025 11:40 PM

Google News

ADDED : மார் 13, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுங்கையூர், கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்தின் அருகே, நேற்று காலை, கொடுங்கையூர் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்த ஐந்து பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த நிலையில், சந்தேகமடைந்த போலீசார் ஐவரையும் சோதனையிட்டனர்.

அதில், 100 கிராம் எடையிலான, 570 எண்ணிக்கை கொண்ட, 57 'டேப்பென்டடோல்' மாத்திரை அட்டைகள் வைத்திருந்தனர்.

விசாரணையில், அவர்கள் செம்மஞ்சேரியைச் சேர்ந்த தனுஷ், 21, கார்த்திக், 24, மணிகண்டன், 30, விக்னேஷ், 20, சசிராம், 27, என்பதும், மும்பையில் இருந்து போதை மாத்திரைகள வாங்கி வந்து, இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

போதை மாத்திரைகளின் மதிப்பு, 65,000 ரூபாய் இருக்க கூடும் என, போலீசார் தெரிவித்தனர். விசாரணைக்கு பின், ஐந்து பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us