sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வாலிபர் கொலையில் தி.மு.க., கவுன்சிலர் தம்பியுடன் 5 பேர் கைது

/

வாலிபர் கொலையில் தி.மு.க., கவுன்சிலர் தம்பியுடன் 5 பேர் கைது

வாலிபர் கொலையில் தி.மு.க., கவுன்சிலர் தம்பியுடன் 5 பேர் கைது

வாலிபர் கொலையில் தி.மு.க., கவுன்சிலர் தம்பியுடன் 5 பேர் கைது


ADDED : மார் 07, 2025 12:33 AM

Google News

ADDED : மார் 07, 2025 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பத்துார், அம்பத்துார் டீச்சர்ஸ் காலனி, ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் தினேஷ் பாபு, 38; ஒப்பந்ததாரர். கடந்த மாதம் 28ம் தேதி, தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள, பேட்மிட்டன் அரங்கின் வெளியே, மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

அம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். மாதவரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன், தினேஷ்பாபு கள்ளகாதலில் இருந்துள்ளார். எச்சரித்தும் தினேஷ்பாபு கண்டுகொள்ளாததால், பெண் வீட்டார் கூலிப்படையை ஏவி கொன்றது தெரிய வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர், மார்ச் 2ல் கைது செய்யப்பட்டனர்.

தலைமறைவாக இருந்த இளம்பெண்ணின் தந்தை செல்வராஜ், 55, கொலைக்கு தீட்டம் தீட்டி கொடுத்த அய்யபாக்கத்தைச் சேர்ந்த தனஞ்செழியன், 24, வழக்கறிஞர்கள் சதீஷ்குமார், 31, விஜயகுமார், 40, அம்பத்துார் மங்களபுரத்தைச் சேர்ந்த சுஜித், 21, ஆகிய ஐந்து பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதில், இளம்பெண்ணின் தந்தை செல்வராஜ், சென்னை மாநகராட்சி 27வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ரவிசந்திரனின் தம்பி ஆவார்.






      Dinamalar
      Follow us