/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது
/
சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது
ADDED : பிப் 25, 2025 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ஐஸ்ஹவுசில், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்த போலீசார், 20,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
ஐஸ்ஹவுஸ் போலீசார், நேற்று முன்தினம் இரவு திருவல்லிக்கேணி, முருகப்பா தெருவில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை கையும் களவுமாக பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சம்பத், 48, சுந்தர், 48, உட்பட, 6 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
நேற்று, அந்த 6 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 20,000 ரூபாய் மற்றும் 5 சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.