/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
8 கிலோ கஞ்சா பறிமுதல்; ஆட்டோ ஓட்டுனர்கள் கைது
/
8 கிலோ கஞ்சா பறிமுதல்; ஆட்டோ ஓட்டுனர்கள் கைது
ADDED : ஆக 02, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா நகர், பெரம்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் மாலை, ஆட்டோ ஓட்டுனர் ஜனார்த்தனன், 32, என்பவரை, சந்தேகத்தின்படி போலீசார் சோதனை செய்தனர்.
அவரது பையில், 7 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில், அதே பகுதியில் ஆட்டோ ஓட்டும் வியாசர்பாடியைச் சேர்ந்த சசிகுமார், 29, என்பவருக்கு கொடுக்க வைத்திருப்பது தெரிந்தது.
சசிகுமாரை பிடித்து போலீசார், அவரது வீட்டில் இருந்து 1 கிலோ கஞ்சாவை சிக்கியது.
மொத்தம் 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் நேற்று சிறையில் அடைத்தனர்.