ADDED : ஆக 22, 2024 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மோரை அருகே, நேற்று முன்தினம் இரவு, ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, செங்குன்றம் நோக்கி, அவ்வழியாக வந்த 'ஹூண்டாய் கிரீட்டா' காரை மடக்கி சோதனை செய்தனர். இதில், தடை செய்யப்பட்ட 'ஹான்ஸ், கூலிப்' உள்ளிட்ட 94 கிலோ பொருட்கள் இருந்தது தெரிந்தது.
குட்காவை பறிமுதல் செய்த போலீசார், அதை கடத்தி வந்த, ஆவடி, பொத்துார், வள்ளி வேலன் நகரைச் சேர்ந்த பிரேம் குமார், 28, என்பவரை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.
தப்பியோடிய ஜெயபாலன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.