/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொண்டையில் சிக்கிய பந்து: கைக்குழந்தை பலி
/
தொண்டையில் சிக்கிய பந்து: கைக்குழந்தை பலி
ADDED : ஆக 05, 2024 12:49 AM
பழவேற்காடு, பழவேற்காடு, அரங்கம்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார், 25; மீனவர். இவரது, எட்டு மாத ஆண் குழந்தை சர்வேஷ்.
நேற்று காலை, சர்வேஷை வீட்டில் உள்ள முகப்பு அறையில் படுக்க வைத்து, அருகில் விளையாட்டு பொருட்களை போட்டு, பெற்றோர் வீட்டு வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென குழந்தை மயங்கி நிலையில் கிடப்பதை கண்டனர். குழந்தை விளையாட்டு பொருட்களில் இருந்த சிறிய பிளாஸ்டிக் பந்து ஒன்றை விழுங்கி, தொண்டையில் சிக்கி மூச்சு திணறலில் மயங்கி இருப்பது தெரிந்தது.
உடனடியாக, பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்ததை உறுதி செய்தனர். சம்பவம் குறித்து, திருப்பாலைவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.