sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.50,000 அபராதம்

/

கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.50,000 அபராதம்

கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.50,000 அபராதம்

கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.50,000 அபராதம்


ADDED : மே 28, 2024 12:13 AM

Google News

ADDED : மே 28, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,குடியிருப்பு திட்டத்தை முறையாக பதிவு செய்யாத தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு, 50,000 ரூபாய் அபராதம் விதித்து ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கழிப்பட்டூர் பகுதியில் டி.வி.எச். எஸ்டேட்ஸ் நிறுவனம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் வீடு வாங்க, ஜெய் நாராயன் ராஜ் என்பவர், 2013ல் ஒப்பந்தம் செய்தார்.

இதற்காக அவர், தனியார் கட்டுமான நிறுவனத்திடம், 47 லட்ச ரூபாய் செலுத்தினார். இதற்கான ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி, தனியார் நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொள்ளவில்லை.

பணத்தை திருபித்தர கோரி ரியல் எஸ்டேட் ஆணையத்தில் ஜெய் நாராயன் ராஜ் புகார் செய்தார். இது குறித்து ரியல் எஸ்டேட் ஆணைய உறுப்பினர் சுனில்குமார் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:

தனியார் கட்டுமான நிறுவனம் குறிப்பிட்ட கால வரம்புக்குள் கட்டுமான பணிகளை மேற்கொள்ளவில்லை. இதனால், தான் செலுத்திய தொகையை திரும்ப பெற மனுதாரருக்கு உரிமை உண்டு. எனவே, மனுதாரர் செலுத்திய, 47 லட்ச ரூபாயை கட்டுமான நிறுவனம் வட்டியுடன் திருப்பித்தர வேண்டும்.

குறிப்பிட்ட குடியிருப்பு திட்டத்தை பதிவு செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ரியல் எஸ்டேட் சட்ட விதிகளை மீறி செயல்பட்டதற்காக, கட்டுமான நிறுவனத்துக்கு, 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us