sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மீன்பிடிக்க சென்றவர் நடுக்கடலில் உயிரிழப்பு

/

மீன்பிடிக்க சென்றவர் நடுக்கடலில் உயிரிழப்பு

மீன்பிடிக்க சென்றவர் நடுக்கடலில் உயிரிழப்பு

மீன்பிடிக்க சென்றவர் நடுக்கடலில் உயிரிழப்பு


ADDED : ஜூலை 19, 2024 12:26 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர், திருவொற்றியூர், பலகைத் தொட்டி குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 53. இவருக்கு, மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் அதிகாலை, திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, பைபர் படகில் தனியாக மீன்பிடிக்க சென்றுள்ளார். மாலை, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், நடுக்கடலில் பைபர் படகு மிதந்துக் கொண்டிருப்பதை உறவினர்கள் பார்த்து, திருவொற்றியூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

நேற்று அதிகாலை மீனவர்கள் உதவியுடன் சென்று பார்த்த போது, பைபர் படகில் உயிரிழந்த நிலையில் ராஜேந்திரன் கிடந்தார். உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிந்த போலீசார், மாரடைப்பால் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us