sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திருமண வீட்டில் நகை 'ஆட்டை' உறவுக்கார பெண்ணுக்கு வலை 

/

திருமண வீட்டில் நகை 'ஆட்டை' உறவுக்கார பெண்ணுக்கு வலை 

திருமண வீட்டில் நகை 'ஆட்டை' உறவுக்கார பெண்ணுக்கு வலை 

திருமண வீட்டில் நகை 'ஆட்டை' உறவுக்கார பெண்ணுக்கு வலை 


ADDED : ஜூலை 03, 2024 12:08 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழல், சென்னை புழல், அம்பத்துார் நெடுஞ்சாலை, தனியார் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் சுகுமார், 60; தனியார் நிறுவன மேலாளர்.

இவரது மனைவி உமாமகேஸ்வரி, 53. இவர்களது மகன் சீனிவாசனுக்கு, கடந்த மாதம் திருமணம் நடந்தது.

திருமண வேலைகளை கவனிக்க உதவியாக உமாமகேஸ்வரி, சூலுார்பேட்டையைச் சேர்ந்த உறவுக்கார பெண் அக் ஷயா என்பவரை அழைத்து வந்திருந்தார்.

அவரிடம் திருமணத்திற்கான நகை, புத்தாடை மற்றும் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி கொடுத்திருந்தார். தன் மொபைல் போனின் பண பரிவர்த்தனைக்கான ரகசிய குறியீட்டு எண்ணையும் நம்பிக்கையோடு கொடுத்திருந்தார்.

இதை பயன்படுத்தி அக் ஷயா, திருமணம் முடியும் வரை, 28 சவரன் நகை, 4 லட்சம் ரூபாயை சிறிது சிறிதாக திருடியுள்ளார்.

திருமணம் முடிந்ததும், அக் ஷயா சூலுார்பேட்டைக்குச் சென்றார். அதன் பின், உமாமகேஸ்வரி குடும்பத்தினர், திருமணத்திற்கான செலவுகளை சரிபார்த்த போது, மேற்கண்ட அளவிற்கு நகை, பணம் திருடு போனது தெரிந்தது.

இதுகுறித்து புழல் போலீசில், நேற்று முன்தினம் புகார் அளித்தனர். இதையடுத்து, அக் ஷயாவை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us