ADDED : செப் 10, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, செப். 10-
திருவான்மியூர், பாம்பன் சுவாமி கோவிலில், 13 லட்சம் ரூபாயில் உருவாக்கப்பட்ட புதிய ரதத்தை, ஹிந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்று, பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலைத்துறை கமிஷ்னர் ஸ்ரீதர், கூடுதல் கமிஷனர் சுகுமார், இணை கமிஷனர் ரேணுகாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உபயதாரர் சதீஷ்குமார் என்பவர், 13 லட்சம் ரூபாய் செலவில் புதிய திருத்தேரை உருவாக்கி கோவில் வசம் ஒப்படைத்துள்ளார்.