sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சினிமா ஊழியர் மீது சூடான பாலை ஊற்றிய ரவுடி வடபழனியில் கைது

/

சினிமா ஊழியர் மீது சூடான பாலை ஊற்றிய ரவுடி வடபழனியில் கைது

சினிமா ஊழியர் மீது சூடான பாலை ஊற்றிய ரவுடி வடபழனியில் கைது

சினிமா ஊழியர் மீது சூடான பாலை ஊற்றிய ரவுடி வடபழனியில் கைது


ADDED : ஜூன் 22, 2024 12:32 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடபழனி, வடபழனி கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராகவேந்திரா, 34. இவர் சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு சிகரெட் வாங்குவதற்காக, அருகே உள்ள கடைக்கு சென்றார். அப்போது கடைக்காரர் சிறிது நேரம் காத்திருக்கும்படி கூறி, உள்ளே சென்றுள்ளார்.

அப்போது அங்கு மதுபோதையில் வந்த இருவர், சிகரெட் வேண்டும் என கேட்டு, சத்தம் போட்டனர். கடைக்காரர் உள்ளே சென்றுள்ளதாகவும், காத்திருக்கும் படியும் ராகவேந்திரா கூறியுள்ளார்.

போதையில் வந்த இருவரும், ஆத்திரமடைந்து அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சூடான பாலை, ராகவேந்திரா மீது ஊற்றிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதில் படுகாயமடைந்த ராகவேந்திரா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து வடபழனி போலீசார் விசாரித்தனர்.

ரவுடி சந்தீப்குமாரும் அவரது நண்பரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரில் ரவுடி சந்தீப்குமார், நேற்று கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us