ADDED : மே 10, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரி, கேரள மாநிலம், ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் ஆலன்ஜியோ பால், 21. தாழம்பூரில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.இ., படித்து வந்தார். நேற்று நண்பர்கள் நான்கு பேருடன், செம்மஞ்சேரி, எழில்முகநகரில் உள்ள வாள்வெட்டி ஏரியில் குளித்தனர்.
ஏரியில் களிமண் நிரம்பி உள்ளது. இந்நிலையில், ஆழத்தில் நீச்சலடித்து சென்ற ஆலன்ஜியோபால், களிமண்ணில் சிக்கி உயிரிழந்தார். சிறுசேரி தீயணைப்பு படையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.