sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நடைபாதையில் கம்பி பாதசாரிகளுக்கு ஆபத்து

/

நடைபாதையில் கம்பி பாதசாரிகளுக்கு ஆபத்து

நடைபாதையில் கம்பி பாதசாரிகளுக்கு ஆபத்து

நடைபாதையில் கம்பி பாதசாரிகளுக்கு ஆபத்து


ADDED : ஜூலை 03, 2024 12:20 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணாசாலை,

அண்ணாசாலையில், மன்றோ சிலை அருகே நடைபாதையில் தெரு விளக்கிற்காக வைக்கப்பட்ட இரும்புக் கம்பியில், பாதசாரிகள் தவறி விழுந்து, விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.

சென்னையின் பிரதான சாலையான அண்ணாசாலையை, நெடுஞ்சாலைத் துறையினர் பராமரித்து வருகின்றனர்.

இச்சாலையில் ஐந்து மாதத்திற்கு முன் தெருவிளக்கு அமைக்க, நடைபாதையில் கம்பிகள் அமைக்கப்பட்டன.

ஆனால், இதுவரை தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால், அவ்வழியாக செல்லும் பாதசாரிகள் கால் இடறி விழுந்து, விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.

நேற்று முன்தினம் இரவு ஈ.வெ.ரா., சாலை பெரியமேடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது, சென்டர் மீடியனில் நீட்டிக்கொண்டிருந்த கம்பி, பெண்ணின் கையில் ஒருபுறம் குத்தி, மறுபுறம் வெளியே வந்தது.

இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறுவதற்குள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்னையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us