ADDED : மார் 10, 2025 12:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோடம்பாக்கம்: கோடம்பாக்கம், காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் வினோத் குமார், 21. கடந்த 2020 மே மாதம், வினோத் குமார் அவரது வீட்டின் அருகில் நின்றிருந்தார். அங்கு வந்த சிலர், வினோத்குமாரை கத்தியால் தாக்கி, அங்கிருந்து தப்பி சென்றனர்.
இது குறித்து கோடம்பாக்கம் போலீசார் விசாரித்து, திருவான்மியூரைச் சேர்ந்த அஜித்குமார், 20, உட்பட சிலரை கைது செய்தனர்.
இந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்த அஜித்குமார் தலைமறைவானார். அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தலைமறைவாக இருந்த அஜித்குமாரை, கோடம்பாக்கம் போலீசார் நேற்று கைது செய்தனர்.