sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வடிகால், கால்வாய் துார்வாரும்பணி ஜூன் 30க்குள் முடிக்க நடவடிக்கை

/

வடிகால், கால்வாய் துார்வாரும்பணி ஜூன் 30க்குள் முடிக்க நடவடிக்கை

வடிகால், கால்வாய் துார்வாரும்பணி ஜூன் 30க்குள் முடிக்க நடவடிக்கை

வடிகால், கால்வாய் துார்வாரும்பணி ஜூன் 30க்குள் முடிக்க நடவடிக்கை


ADDED : மே 23, 2024 12:44 AM

Google News

ADDED : மே 23, 2024 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னையில், தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள, அதிக அடைப்புகள் உடைய, 1,438 கி.மீ., நீளம் கொண்ட வடிகால்களை துார்வாரும் பணி நடக்கிறது. இப்பணியை, ஜூன் 30க்குள் முடிக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியின் கீழ், 2,632 கி.மீ., நீளத்தில் வடிகால் உள்ளது. அடைப்பை பொறுத்து, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை துார்வாரி சீரமைக்கப்படும். இந்த ஆண்டு, தென்மேற்கு பருவமழை சென்னையில் பரவலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், அடைப்பு அதிகம் கண்டறியப்பட்ட, 1,438 கி.மீ., நீள வடிகால்களில், துார்வாரும் பணி துவங்கியுள்ளது.

அதேபோல் வடிகால்களை ஒட்டி, 73,500 எண்ணிக்கையில், கசடு அகற்றும் வடிகட்டி தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் மாம்பலம், ராஜ்பவன், எம்.ஜி.ஆர்., நகர், கொடுங்கையூர், ஜாபர்கான்பேட்டை உள்ளிட்ட 33 கால்வாய்கள், 54 கி.மீ., நீளத்தில் உள்ளன.

இதிலுள்ள ஆகாய தாமரை, திடக்கழிவுகள், கசடுகள் அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக, நான்கு ரோபோடிக், இரண்டு ஆம்பிசியன் வாட்டர் மாஸ்டர் மற்றும் மூன்று மினி வாட்டர் மாஸ்டர் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இது குறித்து, மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் கூறியதாவது:

சாலை, குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில், அதிக அடைப்பு உள்ள வடிகால், கால்வாய்களில் துார் வாரப்படுகிறது.

இப்பணியை, ஜூன் 30ம் தேதிக்குள் முடிக்கும் வகையில், வேகப்படுத்தி உள்ளோம்.

விரிவாக்கத்திற்கு முந்தைய மண்டலங்களில் நடக்கும் வடிகால் பணிகளையும், ஜூன் 30ம் தேதிக்குள் முடிக்க, ஒப்பந்த நிறுவனங்களை வலியுறுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அடையாறு, கூவம் கண்காணிப்பு

அடையாறு, கூவம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பகிங்ஹாம், வீராங்கால், ஓட்டேரி கால்வாய்கள், ஒக்கியம்மடு உள்ளிட்ட பெரிய நீர்வழிப்பாதைகளை, நீர்வளத்துறை கண்காணிக்கிறது. வழக்கமாக, இந்த நீர்வழிப்பாதைகள் வடகிழக்கு பருவமழைக்கு முன், துார்வாரி சீரமைக்கப்படும்.தற்போது, எதிர்பாராத மழை பெய்வதால், வடகிழக்கு பருவமழையை போல் தென்மேற்கு பருவமழையும் அதிகம் பெய்தால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டுள்ளதாக, அதிகாரிகள் கூறினர்.








      Dinamalar
      Follow us