sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'அடைமொழி' ரவுடி கும்பல் கைது

/

'அடைமொழி' ரவுடி கும்பல் கைது

'அடைமொழி' ரவுடி கும்பல் கைது

'அடைமொழி' ரவுடி கும்பல் கைது


ADDED : மே 09, 2024 12:24 AM

Google News

ADDED : மே 09, 2024 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியந்தோப்பு, புளியந்தோப்பு, ஆடு தொட்டி பின்புறம், கன்னிகாபுரத்தை சேர்ந்த 'கருப்பா' என்கிற மணிகண்டன்,36 என்பவரை ஒன்பது பேர் கும்பல் கத்தி மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பியுள்ளனர். அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

தலையில் ஐந்து வெட்டுகளுடன் கை, கழுத்து உள்ளிட்ட பல பகுதியில் காயம் பட்ட மணிகண்டன் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

போலீஸ் விசாரணையில் முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக, 'ஷவர்மா'ரவிச்சந்திரன்,19 என்பவர் காவல்நிலையத்தில் ஆஜர் ஆனார். ஆறு பேரை தனிப்படை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.

புளியந்தோப்பை சேர்ந்த ஷான்பாஷா, 30, 'கோனு' சரவணன், 22, திரு.வி.க., நகரை சேர்ந்த சம்சுதீன்,18, ரிஷ்வான்,18, 'ஆறு மணி' சதீஷ்,18, 'நரம்பு' சஞ்சய்,21 உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள 'பூனை' அஜித், அந்தோணி ஆகியோரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us