sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கொலை திட்டம் தீட்டிய ஆதம்பாக்கம் ரவுடி கைது

/

கொலை திட்டம் தீட்டிய ஆதம்பாக்கம் ரவுடி கைது

கொலை திட்டம் தீட்டிய ஆதம்பாக்கம் ரவுடி கைது

கொலை திட்டம் தீட்டிய ஆதம்பாக்கம் ரவுடி கைது


ADDED : ஆக 29, 2024 12:19 AM

Google News

ADDED : ஆக 29, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆதம்பாக்கம், ஆலந்துாரைச் சேர்ந்தவர் நாகூர்மீரான். தென்சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவரை, 2021ல் ஆதம்பாக்கத்தில், எதிர் கோஷ்டியான ராபின் மற்றும் அவரது கூட்டாளிகளான சீனிவாசன் உள்ளிட்டோர், சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக, நாகூர்மீரானின் கூட்டாளி ஜெயக்குமார் என்பவர் தலைமையில், ராபின் கூட்டாளி சீனிவாசனை, கடந்த ஆண்டு, 11 பேர் கும்பல் வெட்டிக் கொன்றது.

இதையடுத்து, இரு தரப்பினரும் அடிக்க மோதி கொள்ளும் சூழல் ஏற்பட்டதால் இருதரப்பிலும் உள்ள முக்கிய குற்றவாளிகளை கண்காணித்து, போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நாகூர்மீரான் தரப்பு ஆட்களை கொலை செய்ய, ராபின் தரப்பைச் சேர்ந்த பிரபல ரவுடியான ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த குறளரசன், 5, என்பவர் திட்டம் தீட்டியது தெரியவந்தது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குறளரசனை நேற்று, போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us