sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அதானி நிறுவனம் குடிநீர் மையம் அமைப்பு

/

அதானி நிறுவனம் குடிநீர் மையம் அமைப்பு

அதானி நிறுவனம் குடிநீர் மையம் அமைப்பு

அதானி நிறுவனம் குடிநீர் மையம் அமைப்பு


ADDED : ஜூன் 02, 2024 12:14 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்தின் சமூக மேம்பாட்டு துறை சார்பில், திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர், காட்டுப்பள்ளி குப்பத்தில், 1,000 லிட்டர் கொள்ளளவு உடைய குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

காட்டுப்பள்ளி கிராமத்தில் உள்ள மக்களுக்கு, குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது சவாலாக உள்ளது. நிலத்தடி நீரில் அதிக உப்பு தன்மை காணப்பட்டதால், அதை குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை நிலவி வந்தது.

ஒவ்வொரு குடும்பத்தினரும், 20 லிட்டர் குடிநீருக்கு, 30 ரூபாய் செலவு செய்யும் நிலை இருந்தது. இதற்காக மாதம், 800 - 1,000 ரூபாய் செலவானது.

மக்களின் கோரிக்கையை அடுத்து, அதானி காட்டுப்பள்ளி துறைமுகம், 1,000 லிட்டர் கொள்ளவு உடைய குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை அமைத்துள்ளது.

இதனால் அங்குள்ள மக்கள் பயன்பெறுவர்.

அதானி காட்டுப்பள்ளி துறைமுகம் தன் சமூக மேம்பாட்டு துறை வாயிலாக, மீஞ்சூர் வட்டாரத்தில், நான்கு ஊராட்சிகளில் தலா, 1,000 லிட்டர் திறன் உடைய நான்கு தானியங்கி சுத்திகரிப்பு குடிநீர் மையங்களை அமைத்துள்ளது.

மேலும், ஐந்து அரசு பள்ளிகளில், 100 லிட்டர் கொள்ளளவு உடைய ஆறு தானியங்கி சுத்திகரிப்பு மையத்தையும் அமைத்துள்ளது. இதேபோல், பழவேற்காடு மருத்துவமனையிலும் அமைத்துள்ளது.






      Dinamalar
      Follow us