sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

15 மணி நேரத்திற்கு பின் கட்டுக்குள் வந்த தீ பெயின்ட் நிறுவன ரூ.2 கோடி பொருட்கள் நாசம்

/

15 மணி நேரத்திற்கு பின் கட்டுக்குள் வந்த தீ பெயின்ட் நிறுவன ரூ.2 கோடி பொருட்கள் நாசம்

15 மணி நேரத்திற்கு பின் கட்டுக்குள் வந்த தீ பெயின்ட் நிறுவன ரூ.2 கோடி பொருட்கள் நாசம்

15 மணி நேரத்திற்கு பின் கட்டுக்குள் வந்த தீ பெயின்ட் நிறுவன ரூ.2 கோடி பொருட்கள் நாசம்


ADDED : ஜூன் 18, 2024 12:07 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 12:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணலிபுதுநகர், மணலிபுதுநகர் அடுத்த விச்சூரில் உள்ள 'சிட்கோ' தொழிற்பேட்டை வளாகத்தில், பெரம்பூரைச் சேர்ந்த தனபால், 50, என்பவருக்கு சொந்தமான, 'ரூபி பெயின்ட், ஸ்ரீ முருகன் பெயின்ட்' நிறுவனங்கள் செயல்படுகின்றன.

இங்கு, நேற்று முன்தினம் மதியம் 2:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. பல்வேறு தீயணைப்பு நிலையங்களில் இருந்து, 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. 120க்கும் மேற்பட்ட வீரர்கள், 150 அடி உயர ஸ்கை லிப்ட், ராட்சத குழாய் உள்ளிட்டவற்றால், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், ரசாயனம் உள்ளிட்ட பொருட்கள் உள்ளே இருந்ததால், தீ கொழுந்து விட்டெரிந்தது. இதனால், குபுகுபுவென கரும்புகை வெளியேறியது. ஒருவழியாக நேற்று காலை 7:00 மணியளவில் முற்றிலுமாக அணைக்கப்பட்டது.

இந்த விபத்தில், இரண்டடுக்கு கொண்ட இரு கட்டடங்கள் மற்றும் பெயின்ட் மற்றும் மூலப்பொருட்கள் தீக்கிரையாயின.

15 மணி நேரம் ருத்ர தாண்டவமாடிய தீயில், 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயிருக்கலாம் என, மணலிபுதுநகர் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us