/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'அக்னி நண்பர்கள்' வாலிபாலில் அபாரம்
/
'அக்னி நண்பர்கள்' வாலிபாலில் அபாரம்
ADDED : செப் 02, 2024 01:44 AM

சென்னை:தமிழ்நாடு வாலிபால் சங்கம் ஆதரவுடன், சென்னை வாலிபால் சங்கம் சார்பில், மாவட்ட அளவில் இரு பாலருக்கான 'பி - டிவிஷன்' வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள், எழும்பூர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் நடந்தன.
கடந்த 28ல் போட்டிகள் துவங்கின. நேற்று முன்தினம் இறுதிப்போட்டிகள் நடந்தன.
ஆண்கள் பிரிவில் 31, பெண்கள் பிரிவில் 16 என, மொத்தம் 47 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' அடிப்படையில் நடந்தன.
இதில், மகளிர் பிரிவில் ஜேப்பியார் பல்கலை வீராங்கனையர் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், ஆடவருக்கான ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ், சுங்கத்துறை, அக்னி நண்பர்கள், சென்னை போலீஸ் ஆகிய நான்கு அணிகள் அரையிறுதியில் மோதின.
இதில், அக்னி நண்பர்கள் கிளப், சுங்கத்துறை அணியினர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இறுதிப் போட்டியில், சுங்கத்துறை அணியை எதிர்த்து அக்னி நண்பர்கள் அணி களமிறங்கியது. ஆட்டத்தின் துவக்கம் முதல் தடுப்பு ஆட்டத்தில் துடிப்புடன் செயல்பட்ட அக்னி வீரர்கள், தாக்குதல் ஆட்டத்தையும் தரமாகச் செய்தனர். இதனால், ஆட்டத்தில் அனல் பறந்தது.
முடிவில், 25 - 22, 25 - --21, 25 - -20 என, நேர் செட்களில் சுங்கத்துறை அணியை வீழ்த்தி அக்னி வீரர்கள், 'சாம்பியன்' கோப்பையை வசமாக்கினர்.