sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பரந்துார் வரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்

/

பரந்துார் வரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்

பரந்துார் வரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்

பரந்துார் வரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்


ADDED : ஜூலை 27, 2024 12:34 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை பூந்தமல்லி முதல் பரந்துார் வரை மெட்ரோ வழித்தடம் அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம், 1.74 கோடி ரூபாய்க்கு கையெழுத்தானது.

இந்த வழித்தடம் தோராயமாக, 43.63 கி.மீ., நீளத்திற்கு அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் 19 உயர்மட்ட மெட்ரோ நிலையங்கள் அமையும். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துாரில் அமைய உள்ள புதிய விமான நிலையம், திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் அமைய உள்ள பேருந்து நிலையம் மற்றும் இவ்வழித்தடத்தில் எதிர்கால வளர்ச்சி போன்றவற்றை கருத்தில் வைத்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.

இதற்கான ஒப்பந்தம், 1.74 கோடி ரூபாயில், 'ஆர்வீ அசோஷியேட்ஸ் ஆர்கிடெக்ட்ஸ் இன்ஜினியர்ஸ் அண்டு கன்சல்டன்ட்ஸ்' நிறுவனத்துடன், சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குனர் சித்திக் முன்னிலையில் கையெழுத்தானது.

திட்ட அறிக்கை தயார் செய்ய, மண் ஆய்வு மற்றும் நிலப்பரப்பு ஆய்வுக்காக, நுாற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளையிட்டு ஆய்வு செய்யப்பட உள்ளது. இப்பணி நவம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரிவான திட்ட அறிக்கை, விரிவான சீரமைப்பு ஆய்வுக்கு பிறகு, மொத்த நிலையங்கள் எண்ணிக்கை, நிலத்தேவை குறித்த விபரங்கள் இறுதி செய்யப்படும்.






      Dinamalar
      Follow us