/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அகில இந்திய பேட்மின்டன் ஜேப்பியாரில் இன்று துவக்கம்
/
அகில இந்திய பேட்மின்டன் ஜேப்பியாரில் இன்று துவக்கம்
அகில இந்திய பேட்மின்டன் ஜேப்பியாரில் இன்று துவக்கம்
அகில இந்திய பேட்மின்டன் ஜேப்பியாரில் இன்று துவக்கம்
ADDED : மே 31, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான பால் பேட்மின்டன் போட்டி, ஓ.எம்.ஆரில் உள்ள ஜேப்பியார் பல்கலையில், இன்று துவங்குகிறது.
இந்திய பல்கலை சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஜேப்பியார் பல்கலை சார்பில், அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான பால் பேட்மின்டன் போட்டி, இன்று துவங்குகிறது.
போட்டிகள், ஓ.எம்.ஆர்., செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் பல்கலை வளாகத்தில் நடக்கின்றன.
ஆண்களுக்கான இப்போட்டியில், நாடு முழுதும் இருந்து, 72 பல்கலை அணிகள் பங்கேற்கின்றன. இன்று காலை துவங்கும் போட்டிகள், ஜூன் 3ம் தேதி வரை தொடர்ந்து நடக்கின்றன.