/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அம்ருதா விஸ்வ வித்யா பீடம் பட்டமளிப்பு விழா
/
அம்ருதா விஸ்வ வித்யா பீடம் பட்டமளிப்பு விழா
ADDED : செப் 10, 2024 12:51 AM
சென்னை,
அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தில், பி.டெக்., மாணவர்களுக்கான பட்டமளிப்பு, சென்னையில் நடந்தது. இதில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி மன்றத்தின் தலைவர் டி.ஜி.சீதாராம் தலைமை தாங்கி சிறப்பித்தார்.
நிகழ்வில் அவர் பேசுகையில், ''வரும் 2047ம் ஆண்டிற்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறுவதற்கு, உயர்கல்வி துறையின் கல்வி திறனை அதிகரிப்பது இன்றியமையாதது.
''மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, மாணவர்கள் திறனை மேம்படுத்த வேண்டும்,'' என்றார்.
இந்த விழாவில், அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தின் பதிவாளர் டாக்டர் சங்கரன், பொறியியல் பள்ளி தலைவர் டாக்டர் சசாங்கன் ராமநாதன், சென்னை வளாக பொறியியல் மற்றும் கணினி அறிவியல் பள்ளி முதல்வர் டாக்டர் ஜெயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில், 2023 -- 24 கல்வியாண்டில் பி.டெக்., பாடப்பிரிவில் படித்த 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் முதல் இடம் பிடித்த மாணவர்களுக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டன.

