/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
30 கிலோ கஞ்சா கடத்திய ஆந்திர வாலிபர்கள் கைது
/
30 கிலோ கஞ்சா கடத்திய ஆந்திர வாலிபர்கள் கைது
ADDED : மார் 09, 2025 01:20 AM

தாம்பரம், கிழக்கு தாம்பரம் பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று முன்தினம், சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த நபரை, பள்ளிக்கரணை மதுவிலக்கு போலீசார், பிடித்து விசாரித்தனர்.
அதில், ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரியை சேர்ந்த ஜான்சன், 31, காக்கிநாடாவை சேர்ந்த பந்தாரு குமார் பாபு, 25 என்பதும், அவர்கள் 30 கிலோ கஞ்சா கடத்தியதும் தெரிந்தது. விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, தாம்பரம், பல்லாவரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், கூலி தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 30 கிலோ கஞ்சா, மூன்று மொபைல் போன்களை, பறிமுதல் செய்தனர்.