ADDED : ஜூன் 13, 2024 11:59 PM
சார் - பதிவாளரிடம் வாக்குவாதம்
திருப்போரூர் வட்டத்தில், ராயல்பட்டு மதுராபாலுார் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில், தனிநபர் ஒருவர் பட்டா பெற்ற கிராம நத்தம் வகைப்பாடு நிலத்தை, கடந்த மாதம் அவர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார்.
இதை எதிர்த்து, அப்பகுதிவாசிகள் திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் ஆட்சேபனை மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், இம்மாதம் அதே நில சர்வே எண்ணின், மற்றொரு உட்பிரிவு நிலத்தையும் மேற்கண்டவர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார்.
ஆட்சேபனை தெரிவித்தும் பத்திரபதிவு செய்யப்பட்டதாக, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்வதாக சார் - பதிவாளர் தெரிவித்தார். போராட்டக்காரர்களுடன் போலீசார் நடத்திய பேச்சை அடுத்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

