sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஏலச்சீட்டு பணத்தை கேட்ட ஓட்டுநர்கள் மீது தாக்குதல்

/

ஏலச்சீட்டு பணத்தை கேட்ட ஓட்டுநர்கள் மீது தாக்குதல்

ஏலச்சீட்டு பணத்தை கேட்ட ஓட்டுநர்கள் மீது தாக்குதல்

ஏலச்சீட்டு பணத்தை கேட்ட ஓட்டுநர்கள் மீது தாக்குதல்


ADDED : மார் 09, 2025 01:06 AM

Google News

ADDED : மார் 09, 2025 01:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாண்டிபஜார், தி.நகர், ஆர்.கே.புரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 42; ஆட்டோ ஓட்டுநர். இவர், ஆட்டோ ஓட்டும் ஸ்டாண்டில், தி.நகர், ராஜபிள்ளை தோட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், 35, என்பவரும் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

கிருஷ்ணகுமார் வாரம், மாதம் என ஏலச்சீட்டு பிடித்துள்ளார். இவரிடம் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் சீட்டு கட்டி வந்தனர். கடந்த 2024, ஏப்., மாதம் சீட்டு முதிர்வடைந்தும், கிருஷ்ணகுமார் தலைமறைவானார்.

இதையடுத்து, கிருஷ்ணகுமார் பதுங்கி இருந்த அவரது நண்பரின் வீட்டிற்கு சென்று, கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் சீட்டு பணத்தை கேட்டுள்ளனர்.

அப்போது கிருஷ்ணகுமார், அடியாட்களை வைத்து, கிருஷ்ணமூர்த்தி மற்றும் நண்பர்களை இரும்பு கம்பியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்படி, பாண்டிபஜார் போலீசார், கிருஷ்ணகுமாரை நேற்று கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், இதேபோல், 20 பேரிடம் 40 லட்சம் ரூபாய் வரை கிருஷ்ணகுமார் ஏமாற்றியது தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us