sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தொழிலதிபர் சொத்து அபகரிக்க முயற்சி: பா.ஜ., பிரமுகர் கைது

/

தொழிலதிபர் சொத்து அபகரிக்க முயற்சி: பா.ஜ., பிரமுகர் கைது

தொழிலதிபர் சொத்து அபகரிக்க முயற்சி: பா.ஜ., பிரமுகர் கைது

தொழிலதிபர் சொத்து அபகரிக்க முயற்சி: பா.ஜ., பிரமுகர் கைது

1


ADDED : செப் 05, 2024 02:16 AM

Google News

ADDED : செப் 05, 2024 02:16 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சூளைமேடு, சித்ரா அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி, 56; ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்.

செங்கல்பட்டு மாவட்டம், பாலுார் பகுதியில் நிலங்கள் வாங்குவதற்காக, கடலுார் மாவட்ட பா.ஜ., துணை தலைவர் சிவகுமாரிடம், 3 கோடி ரூபாய் கடனாக வாங்கி உள்ளார்.

பின், 14.8 ஏக்கர் அளவுடைய அந்நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து, அவற்றை விற்று தரும்படியும், அதற்கான கமிஷன் தொகை தருவதாகவும் சிவகுமாரிடம் கேட்டுள்ளார்.

இந்நிலையில் சிவகுமார், பாலுார் நிலத்தை தன் பெயருக்கு எழுதி தரும்படி, அடியாட்களை நேற்று முன்தினம் அழைத்து சென்று, மூர்த்தியை மிரட்டியுள்ளார்.

இது குறித்து மூர்த்தி புகாரின்படி வழக்கு பதிந்த சூளைமேடு போலீசார், மிரட்டல் விடுத்த, சிவகுமார், 43, என்பவரை கைது செய்தனர். மேலும், வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us