sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நடுவுல கொஞ்சம் கூரையை காணோம் ஆவடி ரயில் நிலையத்தில் அவலம்

/

நடுவுல கொஞ்சம் கூரையை காணோம் ஆவடி ரயில் நிலையத்தில் அவலம்

நடுவுல கொஞ்சம் கூரையை காணோம் ஆவடி ரயில் நிலையத்தில் அவலம்

நடுவுல கொஞ்சம் கூரையை காணோம் ஆவடி ரயில் நிலையத்தில் அவலம்


ADDED : ஜூன் 11, 2024 12:36 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, சென்னை புறநகர் ரயில் நிலையங்களில், பிரதான ரயில் நிலையங்களில் ஒன்றாக ஆவடி ரயில் நிலையம் உள்ளது. இங்கு, நான்கு நடைமேடைகள் மற்றும் ஆறு இருப்பு பாதைகள் உள்ளன. ஆவடி மார்க்கமாக தினமும் 285 மின்சார ரயில்கள் மற்றும் 5 விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என, தினமும், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.

அதேநேரம், ஆவடி ரயில் நிலையத்தில் பொதுமக்கள் காத்திருக்கும் பல நிழற்கூரைகள் ஆங்காங்கே ஓட்டைகளுடன் காட்சி அளிக்கின்றன.

குறிப்பாக, விரைவு ரயில்கள் வந்து செல்லும்4வது நடைமேடையில் உள்ள நிழற்கூரை படுமோசமாக உள்ளது.

எனவே பயணியர் நலனை கருத்தில் வைத்து, மழைக்காலம் துவங்கும் முன், ஓட்டை உடைசல் நிழற்கூரைகளை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.






      Dinamalar
      Follow us