sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அயனாவரம் - ஓட்டேரி சுரங்க பணி நிறைவு

/

அயனாவரம் - ஓட்டேரி சுரங்க பணி நிறைவு

அயனாவரம் - ஓட்டேரி சுரங்க பணி நிறைவு

அயனாவரம் - ஓட்டேரி சுரங்க பணி நிறைவு


ADDED : ஜூன் 14, 2024 12:00 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லிஸ் வரையிலான முதல் 9 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளை 'டாடா ப்ராஜெக்ட்ஸ்' நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக சுரங்கம் தோண்டும் ஏழு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதில் ஒரு பகுதியாக அயனாவரத்தில் இருந்து ஓட்டேரி வரையிலான சுரங்கப்பாதை பணி நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

அயனாவரம் நிலையத்திலிருந்து ஓட்டேரி நிலையத்துக்கு சுரங்கம் தோண்டும் பணி, கடந்த ஆண்டு அக்., 23-ல் தொடங்கியது. இந்த பணிக்காக ஆனைமலை என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. அயனாவரம் நிலையத்தில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி, 925 மீட்டர் தொலைவுக்கான பணி, வெற்றிகரமாக முடித்து ஓட்டேரி நிலையத்தை இயந்திரம் வந்தடைந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us