/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாயை அடித்து கொன்று 4 சவரன் திருட்டு
/
நாயை அடித்து கொன்று 4 சவரன் திருட்டு
ADDED : ஆக 02, 2024 12:17 AM
பொன்னேரி,
பொன்னேரி அடுத்த வேம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி, 49. கடந்த, மே மாதம் கணவர் இறந்த நிலையில், சுமதி தனியாக வசித்து வருகிறார். வீட்டின் அருகிலேயே சிறியதாக மளிகை கடை வைத்துள்ளார்.
கடந்த, 29ம் தேதி, சொந்த ஊரான கும்பகோணத்திற்கு சென்று விட்டு, நேற்று காலை திரும்பியபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 4 சவரன் நகை, 2.50 கிலோ வெள்ளி, உண்டியல் பணம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரிந்தது.
இவர் வளர்த்த வந்த நாய் வீட்டின் பின்புறம் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தது. நள்ளிரவில் திருட வந்த நபர்கள், நாயை அடித்து கொன்றிருக்கலாம் என தெரிகிறது.
சுமதி, கொடுத்த புகார்படி பொன்னேரி போலீசார் விசாரிக்கின்றனர்.