sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாநகராட்சி லாரியில் பைக் மோதி வாலிபர் பலி

/

மாநகராட்சி லாரியில் பைக் மோதி வாலிபர் பலி

மாநகராட்சி லாரியில் பைக் மோதி வாலிபர் பலி

மாநகராட்சி லாரியில் பைக் மோதி வாலிபர் பலி


ADDED : ஜூன் 07, 2024 12:12 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடபழனி, ம்.ஜி.ஆர்., நகர் சூளைப்பள்ளத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ், 26. இவரது நண்பர் வெற்றி, 24. இருவரும், நேற்று அதிகாலை, 'யமஹா எம்டி15' பைக்கில், அசோக் பில்லர் வழியாக, 100 அடி சாலையில் இருந்து வடபழனி நோக்கிச் சென்றனர். பைக்கை, சந்தோஷ் தலைக்கவசம் அணியாமல் ஓட்டிச் சென்றுள்ளார்.

வடபழனி மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கும் போது, சாலையை சுத்தம் செய்யும் மாநகராட்சி லாரியின் பின்பக்கம், பைக் மோதியது.

இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில், சந்தோஷ் தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அங்கிருந்தோர் வெற்றியை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்து வந்த பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார், சந்தோஷ் உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலை சுத்தம் செய்யும் லாரி ஓட்டுனரான, வடபழனியைச் சேர்ந்த சங்கர், 43, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us