ADDED : ஆக 01, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்,அரும்பாக்கம் வெங்கடேஸ்வரா தெருவைச் சேர்ந்தவர் ராமராஜ், 35; பிசியோதெரபிஸ்ட். இவர், கடந்த 28ம் தேதி, திருமங்கலத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் வெளியே, தன் 'பைக்'கை நிறுத்திவிட்டுச் சென்றார்.
சிறுது நேரத்திற்குப் பின் வெளியே வந்து பார்த்த போது, பைக் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, போலீசார் விசாரிக்கின்றனர்.