sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரவுடிக்கு துப்பாக்கி வழங்கிய பா.ஜ., நிர்வாகிக்கு குண்டாஸ்

/

ரவுடிக்கு துப்பாக்கி வழங்கிய பா.ஜ., நிர்வாகிக்கு குண்டாஸ்

ரவுடிக்கு துப்பாக்கி வழங்கிய பா.ஜ., நிர்வாகிக்கு குண்டாஸ்

ரவுடிக்கு துப்பாக்கி வழங்கிய பா.ஜ., நிர்வாகிக்கு குண்டாஸ்


ADDED : ஜூலை 05, 2024 12:36 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு,

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்த ரவுடி சத்யா என்கிற சீர்காழி சத்யா, 41. இவர், பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த பா.ஜ., மாநில வழக்கறிஞர் பிரிவு செயலர் அலெக்ஸிஸ் சுதாகர், 50, என்பவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக, கடந்த 28ம் தேதி மாமல்லபுரம் வந்தார்.

தகவல் அறிந்த போலீசார், செங்கல்பட்டு பழவேலி பகுதியில், சத்யாவை மடக்கினர். அப்போது, சத்யா துப்பாக்கியுடன் போலீசாரை மிரட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து அவரை துப்பாக்கியால் சுட்டு, போலீசார் பிடித்தனர்.

சத்யாவுக்கு கள்ளத் துப்பாக்கி வழங்கியதாக, அலெக்ஸிஸ் சுதாகர் என்பவரை, மாமல்லபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அலெக்ஸிஸ் சுதாகருக்கு ஜாமின் வழங்கக்கோரி, அவரது வழக்கறிஞர்கள், செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில், கடந்த 2ம் தேதி மனுதாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணையை வரும் 8 ம் தேதிக்கு ஒத்தி வைத்து, நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா உத்தரவிட்டார்.

இந்நிலையில், ரவுடி சத்யாவுக்கு கள்ளத் துப்பாக்கி வழங்கியது உட்பட, அலெக்ஸிஸ் சுதாகர் மீது, ஏற்கனவே மூன்று வழக்குகள் உள்ளதால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு, எஸ்.பி., சாய் பிரணீத் பரிந்துரை செய்தார்.

இதனையேற்று, அலெக்ஸிஸ் சுதாகரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் அருண்ராஜ் நேற்று உத்தரவிட்டார்.

சென்னை புழல் சிறையில் உள்ள அவரிடம், குண்டர் சட்ட நகலை மாமல்லபுரம் போலீசார் வழங்கினர்.






      Dinamalar
      Follow us