/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பார்வையற்றோர் வாலிபால் செங்கை, ராணிபேட்டை அபாரம்
/
பார்வையற்றோர் வாலிபால் செங்கை, ராணிபேட்டை அபாரம்
ADDED : ஜூலை 27, 2024 12:53 AM

சென்னை, தமிழ்நாடு பார்வையற்றோருக்கான வாலிபால் சங்கம் மற்றும் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி இணைந்து, 9வது ஆண்டு பார்வையற்றோருக்கான மாநில வாலிபால் போட்டியை, நேற்று துவங்கின.
செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரியில் நடக்கும் போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உட்பட 21 மாவட்ட அணிகள் பங்கேற்கின்றன.
ஆண்களில் 16 அணிகளும், பெண்களில் ஐந்து அணிகளும், லீக் முறையில் மோதுகின்றன. காலை 10:00 மணிக்கு துவங்கிய முதல் நாள் போட்டியை, செயின்ட் ஜோசப் கல்லுாரியில் நிறுவனர் பாபு மனோகரன் துவங்கினார்.
ஆண்களுகான போட்டியில், தஞ்சை அணி, 15 - 7, 15 - 10 என்ற கணக்கில் சென்னையையும், ஈரோடு அணி, 15 - 9, 15 - 13 என்ற கணக்கில் செங்கல்பட்டு அணியையும் வீழ்த்தின.
ராணிபேட்டை அணி, 15 -7, 12 - 15, 15 - 17 என்ற கணக்கில் கள்ளக்குறிச்சியையும், வேலுார் அணி, 15 - 8, 15 - 6 என்ற கணக்கில் காஞ்சிபுரத்தையும், நெல்லை, 15 - 2, 15 - 2 என்ற கணக்கில் சேலம் அணியையும் தோற்கடித்தன. போட்டிகள் இன்றும் நடக்கின்றன.