sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வாரிய இடத்தில் அத்துமீறல் வாகனங்கள், குப்பையால் சீர்கேடு

/

வாரிய இடத்தில் அத்துமீறல் வாகனங்கள், குப்பையால் சீர்கேடு

வாரிய இடத்தில் அத்துமீறல் வாகனங்கள், குப்பையால் சீர்கேடு

வாரிய இடத்தில் அத்துமீறல் வாகனங்கள், குப்பையால் சீர்கேடு


ADDED : மே 14, 2024 12:56 AM

Google News

ADDED : மே 14, 2024 12:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர், கிழக்கு அண்ணா நகர் பகுதிக்கு உட்பட்ட நியூ ஆவடி சாலையோரத்தில், குடிநீர் வாரிய இடத்தில் எச்சரிப்பு பலகை இருந்தும், அத்துமீறி கொட்டப்படும் குப்பை கழிவுகள் மற்றும் கேட்பாரற்ற வாகனங்களால் சீர்கேடு நிலவுகிறது.

அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியான வில்லிவாக்கம், அண்ணா நகர் மற்றும் அயனாவரம் பகுதியில், நியூ ஆவடி சாலை உள்ளது.

இங்கு ஒரு புறத்தில், வில்லிவாக்கத்தில் இருந்து, ஐ.சி.எப்., மற்றும் அண்ணா நகர், அயனாவரம் நோக்கி செல்லும் பாதையும், மற்றொரு புறத்தில் அண்ணா நகரில் இருந்து வில்லிவாக்கம், பாடி நோக்கி செல்லும் இரு பாதைகளும் உள்ளன.

இதில், பாடியை நோக்கி செல்லும் பாதையின் சாலையோரம் ஐ.சி.எப்., ரயில்வேக்கும், வில்லிவாக்கம் - அண்ணா நகரை நோக்கி செல்லும் சாலையோரம் குடிநீர் வாரியத்திற்கும் செந்தமான இடங்கள் உள்ளன.

இந்த இருபுறங்களில் உள்ள சாலையோரங்களை, பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு இருப்பதால், சாலை சுருங்கியதுடன், காலையும் மாலையும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.

இதில் அண்ணா நகரை நோக்கி செல்லும் பாதையில், அயனாவரம், கீழ்ப்பாக்கம் குடிநீர் வாரியம் வரை செல்கிறது. இந்த பாதையில் உள்ள குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான இடத்தில், சாலையோரத்தில் சிலர் அத்துமீறி குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால், சாலை முழுதும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

குறிப்பாக, கிழக்கு அண்ணா நகர் பகுதி மசூதி அருகில், சாலையோரங்களில் குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான இடம் என, அறிவிப்பு பலகை உள்ளது. எச்சரிப்பு பலகை இருந்தும், சிலர் அத்துமீறி குப்பை கழிவுகள் மற்றும் கட்டடக்கழிவுகளை கொட்டுவதும், பழுதடைந்த வாகனங்கள் நிறுத்துவதும் வாடிக்கையாகி விட்டது.

இதனால், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, குப்பை கழிவுகளை அகற்றி, குடிநீர் வாரிய இடத்தில் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.






      Dinamalar
      Follow us