/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவான்மியூரில் ஜூன் 9 வரை புத்தக கண்காட்சி
/
திருவான்மியூரில் ஜூன் 9 வரை புத்தக கண்காட்சி
ADDED : மே 25, 2024 06:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவான்மியூர்:
அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் இணைந்து, ‛நம்ம ஊரு புத்தக திருவிழா' என்ற தலைப்பில், திருவான்மியூர், ஜெயஸ்ரீ திருமண மண்டபத்தில், ஜூன் 9ம் தேதி வரை, புத்தக கண்காட்சி நடத்துகின்றன.
நேற்று நடந்த துவக்க விழாவில், மத்திய தோல் பொருட்கள் ஏற்றுமதி கழக செயல் இயக்குனர் செல்வம், கண்காட்சியை துவக்கி வைத்தார்.
தினமும் காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை திறந்திருக்கும். அனைத்து நுால்களுக்கும், 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். குழந்தைகளின் திறமைகளை வெளி கொண்டுவர, ஓவியப்போட்டி நடத்தப்படும் என, கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.