sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

/ நூல் விமர்சனம்

/

/ நூல் விமர்சனம்

/ நூல் விமர்சனம்

/ நூல் விமர்சனம்


ADDED : ஜன 12, 2024 12:41 AM

Google News

ADDED : ஜன 12, 2024 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாமரை பிரதர்ஸ் மீடியா பி.லிட் வெளியீடுகள்

நுால்களைப்பெற அழைக்க: 1800 425 7700 / வாட்ஸ் ஆப் செய்ய 75500 09565

1. 108 திவ்யதேச தரிசனம் - ஆழ்வார் உரையுடன்

ஆசிரியர்: பிரபு சங்கர்

பக்கம்: 180, விலை: ரூ. 240

--

தமிழகத்தில் உள்ள 108 திவ்யதேசங்களைப் பற்றி கூறுகிறது. முக்கியமாக, தாமிரபரணி நதிக்கரையில் உள்ள நவதிருப்பதிகளைப் பற்றியும், அங்கு பாடிய ஆழ்வார்கள் பற்றியும், பாசுரங்கள் பற்றியும் விளக்கி சிலாகிக்கிறது. நம்மாழ்வாரின் பாசுரங்களின் விளக்கம் அருமை.

***

2. தெய்வீகத் திருமணங்கள்

ஆசிரியர் : வா.ஜானகிராமன்

பக்கம்: 200, விலை: ரூ. 260

-

சிவன் - பார்வதி, சீனிவாசன், ருக்மணி, ராமன் - சீதை திருமணங்கள் சொல்லும் உள்ளுறை செய்திகளை அழகிய விளக்கங்களுடன் தொகுத்துள்ளார். வாழ்க்கை முழுக்க பயணிக்கும் உன்னத உறவான கணவன் - மனைவி உறவின் பெருமைகளை சொல்லி, வலுப்படுத்தும் நுால்.

---

3. இரத்தத்துளி

ஆசிரியர்: எல்.கைலாசம்

பக்கம்: 478, விலை: ரூ. 180

வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

-

அதித்த கரிகாலனின் கொலைதான் சோழர் சரித்திரத்தில் நெஞ்சை உலுக்கும் நிகழ்வாக இன்று வரை உள்ளது. திருவாலங்காடு செப்பேடும், உடையார்குடி கல்வெட்டும் இதுகுறித்த செய்திகளை சொன்னாலும், இந்த நாவல், புலனாய்வு முறையில் விறுவிறுப்பாக பின்னப்பட்டுள்ளது.

*****

4. இந்தியாவின் நீர் மனிதன் ராஜேந்தர்சிங்

ஆசிரியர்: ஜெகாதா

பக்கம்: 220, விலை: ரூ. 270

வெளியீடு: சத்யா

-

இந்தியாவின் வறண்ட மாநிலமான ராஜஸ்தானில், 850 கிராமங்களில், 4,500 தடுப்பணைகளைக் கட்டி, மழைநீர் சேமிப்பு திட்டத்தின் வாயிலாக ஆறு, குளங்களை மீட்டவர் ராஜேந்திரசிங். ஏளனம் செய்த மக்களையே, தன் சக்தியாக்கி சாதித்த இவரது வியூகங்களை சொல்லும் நுால்.

*****

5. தமிழ் இலக்கிய வரலாறு

ஆசிரியர்: தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

பக்கம்: 384

விலை: ரூ. 380

வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

--

புதுமைக்காலம் துவங்கி, சிற்றிலங்கியங்கள், சோழர்கால காப்பியங்கள், சமண காப்பியங்கள், ஆழ்வார், நாயண்மார்கள் காலம், இரட்டைக்காப்பியங்கள், சங்கப்பாடல்கள் வரை தமிழ் இலக்கிய வரலாற்றை ஆய்வாக செய்து, சிகாகோவில் ஆற்றிய சொற்பொழிவின் தொகுப்பு நுால்.

--------

நிப்பானம்

ஆசிரியர்: சுவேதா

பக்கம்: 136, விலை: ரூ. 130

வெளியீடு: திருநங்கை பிரஸ்

-

திருநங்கையரின் வாழ்வு பற்றிய புரிதல் மற்றும் தெளிவு, போராட்ட குணம், கண்ணியமாக வாழ வேண்டிய விருப்பம், நேர்மை உள்ளிட்டவற்றை, திருநங்கை சமூகத்துக்கு விதைக்கும் நுால். திருநங்கையரை வெறுத்து ஒதுக்கும் சமூகத்திற்கான அறிவியல் புரிதலையும் தருகிறது.

***

காலிடுக்கில் ஒப்பந்தங்கள்

ஆசிரியர்: ஆல்கா

பக்கம்: 56, விலை: ரூ. 100

வெளியீடு: திருநங்கை எல்.எல்.பி

-

மாறிய பாலினத்தவரின் உணர்வுகளை சொல்லும் கவிதைகள் நிரம்பி உள்ளன. தவறான காதல், கண்மூடித்தனமான காதலையும் கவிதைகள் கண்டிக்கத் தவறவில்லை. இவர் மருத்துவ ஆலோசகராக உள்ளதால், குடும்ப வன்முறைக்கு எதிராகவும் குரல் எழுப்பி உள்ளார்.






      Dinamalar
      Follow us